News Just In

1/05/2023 05:41:00 PM

பொதுஜன பெரமுன முதலாவது கட்டுப்பணத்தை செலுத்தியது!



உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது கட்டுப்பணத்தை களுத்துறை மாவட்ட தேர்தல் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை செலுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர் தேர்தல் செயலகத்திற்குச் சென்றுள்ளதோடு, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரப் பணிகளையும் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: