- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பிரதேச செயலக மட்டத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான செயலணியின் செயற்பாட்டு ஆளுமை விருத்திச் செயலமர்வு தம்பலகாமம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் திங்களன்று 17.10.2022 இடம்பெற்றது.
பிரதேச செயலகப் பிரிவில் பெண்கள், பெண் பிள்ளைகள், சிறுவர்கள் எதிர்கொள்ளக் கூடிய வன்முறைகள் துஷ்பிரயோகங்கள் அசௌகரியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றைத் தடுப்பதற்கான முன்னாயத்தங்களையும் காப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் இந்த ஆளுமை விருத்திச் செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு யூ.எஸ்.எயிட் நிறுவனம் நிதி அனுசரணை வழங்குகின்றது. இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வ தொண்டர் அமைப்பின் திட்டத்திற்குப் பொறுப்பான வெளிக்கள அலுவலர் அனுஜா மோகனகுமார் தலைமையில் செலயமர்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக மட்டத்தில் பெண்கள் பெண் பிள்ளைகள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் செயலணியின் சார்பில் தம்பலகாமம் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரி பி.எம்.பி.எஸ். ஜயமாலி, பொலிஸ் உத்தியோகத்தர் சுனேத்ரா வீரசிங்ஹ, பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி அலுவலர்களான கே. பாமினி, எம்.ஏ. நஸ்ரின் டிலானி இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வ தொண்டர் அமைப்பின் பயிற்சி உத்தியோகத்தர் எஸ். சௌமியா உட்பட பிரதேச செயலக மட்டத்தில் பெண்கள் சிறுவர்கள் விடயம் சார்;ந்து பணியாற்றும் இன்னும் பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments: