News Just In

10/14/2022 07:33:00 AM

தென்னிலங்கையில் பலரையும் வியக்கவைத்த இளம் தம்பதிகள்!

தென்னிலங்கையில் கணவனின் பிறந்தநாளுக்கு மனைவி கொடுத்த பிறந்தநாள் பரிசு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல சிரமங்களுக்கு மத்தியில் பள்ளிக்கு வரும் லட்சக்கணக்கான குழந்தைகள் நாடு முழுவதும் உள்ளனர். இந்நிலையில் ருசியான மற்றும் ஆரோக்கியமான உணவை பள்ளி மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார் நதிஷா மதுஷானி.
தென்னிலங்கையை சேர்ந்த நதிஷா மதுஷானி எனும் யுவதி தனது கணவர் மதுசங்க குணவர்தனவின் பிறந்த நாளுக்கு பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியுள்ள சம்பவம் பலரையும் நெகிழவைத்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பல பலபெற்றோர் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்களின் பிள்ளைகளும் வயிறார உண்பது கிடையாது.

பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு இன்றியே பாடசாலைகளுக்கு செல்கின்றனர். இவ்வாறான நிலையில் மேற்படி தம்பதிகள் பாடசாலை மாணவர்களுக்கு உணவளித்துள்ள நிலையில் குறித்த தம்பதிகளுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

No comments: