News Just In

10/07/2022 06:31:00 PM

அதிவேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்து உயிரிழந்த இளைஞன்!

இங்கிரிய நம்பபான பகுதியில் விருந்தொன்றில் இருந்து காரில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் மூவர் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர். வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கால்வாயுடன் மோதியுள்ளது.

இச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாச்சிமலை, இங்கிரிய, மஹா இங்கிரிய பகுதியைச் சேர்ந்த முத்துமால கலனஜித் என்ற 19 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மூன்று இளைஞர்களை ஏற்றிச் சென்ற கார் இங்கிரியவில் இருந்து இரத்தினபுரி நோக்கி அதிவேகமாக பயணித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து நம்பபான பகுதியில் விபத்துக்குள்ளானது.

இறந்தவர் காரின் முன் இடது இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments: