நாளை (29) வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாளை அதிகமான வலயங்களில் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் பகலில் 01 மணித்தியாலமும் இரவில் 01 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
M, N, O, X, Y, Z ஆகிய வலயங்கள் காலை 5.30 மணி முதல் காலை 8.00 மணி வரை 02 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டை எதிர்கொள்ளும்.
வலயம் CC யில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 02 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: