News Just In

9/28/2022 07:59:00 PM

சம்மாந்துறையில் காட்டு யானையின் அட்டகாசம் :அல் உஸ்வா பிலாண்டேசன் சேதம்!

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளேக் ஜே மேற்கு 3 கிராம சேவையாளர் பிரிவில்அமைந்துள்ள சம்மாந்துறை அல்-உஸ்வா பிலாண்டேசன் வளாகத்தினுல் இன்று(28) அதிகாலை உள் நுழைந்த காட்டு யானை உஸ்வா பிலாண்டேசன் வாளாகத்தில் உள்ள பயன்தரும் வாழை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி உள்ளதுடன் வீட்டினையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அல்-உஸ்வா பிலாண்டேசன் உரிமையாளர் இஸ்மாலெப்பை முஹம்மது முஸ்தபா மெளலவி தெரிவித்தார்.

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

No comments: