News Just In

9/27/2022 10:46:00 AM

நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழப்பு - மின்வெட்டு நேரம் நீடிக்கும்



நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் செயலிழந்துள்ளது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக மின்வெட்டு நீடிக்கலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். .

அதற்கமைய, மின்வெட்டு காலத்தை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

No comments: