News Just In

9/07/2022 01:40:00 PM

சேனையூரில் எழுத்தாளர்கள் ஒன்றுகூடல்




பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்ற எழுத்தாளர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வும், பிரதேச சாகித்திய விழாவும் நாளை மறுதினம் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் மூதூர் - சேனையூர் அநாமிகா பண்பாட்டு மையத்தில் இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி. சரண்யா சுதர்சன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவுக்கு முதன்மை அழைப்பாளராக ஓய்வுபெற்ற அதிபர் இரா.இரத்தினசிங்கம் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

இந்நிகழ்வுக்கு கிண்ணியா, மூதூர், வெருகல், சேருநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இருக்கின்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டு அவர்களுக்குள் ஒரு அறிமுகத்தையும், அவர்களுக்குள் இருக்கின்ற கலை கலாசார செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்குடனேயே இந்த ஒன்றுகூடல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

அண்மைக்காலமாக, மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவ்வாறான நிகழ்வுகளை மாவட்ட ரீதியாகவும், பிரதேச செயலகங்கள் ரீதியாகவும் நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


No comments: