News Just In

8/01/2022 10:46:00 AM

நெருக்கடி நிலையில் சிரமப்படும் ஏழைகளுக்கு உணவு விநியோகம்!




ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் சிரமப்படும் இல்லாத இயலாத ஏழைக் குடும்பங்களுக்கு உணவு விநியோகம் செய்யும் தர்ம செயல்பாடு ஏறாவூரில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் எம்.எல். செய்யது அஹமத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்ட 500 குடும்பங்களுக்கு ஞாயிறன்று 31.07.2022 சிறந்த ஒரு வேளை உணவு வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஏழைகளான பயனாளிகளுக்கு சமைத்த உணவுப் பொதிகளை வழங்கி வைத்து உரையாற்றிய ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் செய்யது அஹமத்> தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான மக்கள் தமது தொழில்களை இழந்து நாளாந்த வருமானத்தை இழந்து ஜீவனோபாயத்திற்கு வழியின்றி தமது ஒருவேளை உணவுக்குக் கூட சிரமப்படுவதை அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் எமது அமைப்பு கொடையாளிகளினதும் பரோபகாரிகளினதும் உதவியைக் கொண்டு சமைத்த உணவு வழங்கப்படுகிறது.” என்றார்.ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வில் மேற்படி ஒன்றியத்தின் ஸ்தாபகர் எம்.எச்.எம். இஸ்ஸத் உப தலைவர் எஸ்.எம்.எம். ஹனீபா> பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.எம் நஜிமுதீன் உட்பட இன்னும் பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.













No comments: