இலங்கை போக்குவரத்து சபை வாழைச்சேனை கிளை ஊழியர்கள் இன்று (16) போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வாழைச்சேனை இ.போ.சபைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியின் குறுக்கே பஸ் வண்டிகளை நிறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடமையினை மேற்கொள்ள தூர இடங்களிலிருந்து டிப்போவுக்கு வரும் தமக்கு பெற்றோல் வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்தே ஊழியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸாரும், இராணுவத்தினரும் போராட்டம் நடாத்திய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்.
அந்தவகையில், நாளை ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்ததுக்கமைய ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
No comments: