ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நேற்று (15) நீண்ட நாட்களின் பின்னர் 700 லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது.
நேற்று எரிவாயு விநியோகம் செய்யப்படும் எனும் தகவலை அறிந்து கொண்ட மக்கள் நேற்றுமுன்தினம் (14) மாலை முதல் நேற்று (15) மதியம் வரை நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
அந்தவகையில், ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கு 350 எரிவாயு சிலிண்டர்களும் வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கு 350 சிலிண்டர்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
ஓட்டமாவடி பிரதேச செயலக செயலாளர் வீ.தவராஜா மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகளின் மேற்பார்வையில் குடும்ப அட்டைகள் பெற்றுக் கொண்ட மக்களுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
No comments: