News Just In

7/20/2022 10:46:00 AM

இலங்கையின் ஜனாதிபதி யார்..! முதல் வாக்கினை பதிவு செய்த சபாநாயகர் - நாடாளுமன்றில் மகிந்த பிரசன்னம்




புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.

முதலாவதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தனது வாக்கினை பதிவு செய்துள்ளதோடு, அடுத்ததாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் வாக்கினை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து பேர் குறிப்பிட்டு அழைக்கப்படும் உறுப்பினர்கள் தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அத்துடன் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்விற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சமூகமளித்துள்ளார்.

No comments: