News Just In

7/19/2022 01:09:00 PM

மட்டக்களப்பு ஆரையம்பதியில் வங்கி, கிராமசேவையாளர் களுக்கும்எரிபொருள் வினியோகம் சிறப்பாக நடைபெற்றது,




(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் ஆரையம்பதி ஐஓசி எரிபொருள் நிலையத்தின் தலைவர் கே. சுரேஷிடம் முன்வைத்த அறிவுறுத்தலின் அடிப் படையில் வங்கி சேவையாளர்களுக்கும் கிராம சேவை யாளர் களுக்கும்,சுற்றுலா பயணிகளுக்கும் மற்றும் ஏனைய அன்றாட அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இன்று எரிபொருள் வழங்கும் பணிகள் இடம்பெற்றன.

இங்கே அரசாங்க அதிபர் கருணாகரன் கருத்து வெளியிடு கை யில்;- .இந்த எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் ஐஓசி நிறு வனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருளை வழங்கி வைப் பதற்கு கூடிய அக்கறை காட்டுவதையிட்டு அந்நிறுவ னத்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர் பாராட்டு தெரிவித்தார் .

இதேவேளைஇப்பிரதேசத்தில் சகல தரப்பினருக்கும் பாரபட்ச மின்றி எரிபொருள் வழங்கிவரும் ஐ.யோ.சி நிறுவனத்தின் முகா மைத் துவப் பணிப்பாளர் கே சுரேஷ் இங்கு கருத்து வெளியிடு கையில்;- அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மக்களுக்கும் அரசு பணி யாளர்களுக்கும் இலகுவாக எரிபொருள் பெற்றுக் கொடுப் பதற்குமாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் முடிந்த அளவு முயற்சிகள் எடுத்து வருவதாகவும் அதன் அடிப்படையில் தட்டுப் பாடின்றி எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுரேஷ் இங்கு தெரிவித்தார்.








No comments: