News Just In

6/04/2022 07:08:00 AM

கோட்டாபயவுக்கு பதிலாக மோடியின் படத்தை தொங்க விடுங்கள் : நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார!

அனைத்து அரச நிறுவனங்களிலும் அரச தலைவர் கோட்டாபயவிற்குப் பதிலாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் படம் தொங்கவிடப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியாவை தவிர வேறு புகலிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று, இலங்கை, இந்தியாவில் இருந்து பொருட்களை விநியோகிக்கும் ஒரே நாடாக மாறியுள்ளது என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments: