News Just In

6/04/2022 12:03:00 PM

சுமந்திரனின் பாதுகாப்பு கடமைக்காக ஒதுக்கப்பட்ட இராணுவ சிப்பாய் தற்கொலை!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கடமைக்காக ஒதுக்கப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் சொந்த துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

22 வயதான குறித்த இராணுவ வீரரின் சடலம் இன்று அதிகாலை வெள்ளவத்தையில் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள இல்லத்திற்கு செல்லும் ஒழுங்கையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தார் என குறிப்பிடப்படுகின்றது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை தொடர்புகொண்டு கேட்ட போது குறித்த இராணுவ வீரர் தனது பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டவர் எனவும் இருப்பினும் தனக்கு இராணுவ பாதுகாப்பு தேவையில்லை என தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இருந்த போதும் குறித்த இராணுவவீரர் உட்பட்ட இராணுவ குழுவினர் தனது வீட்டில் இருந்து சில வீடுகள் தள்ளி வீதிப் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தற்கொலை செய்து கொண்ட இராணுவவீரருக்கும் தனக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை எனவும் இராணுவ பாதுகாப்பு தேவையில்லை என முன்னரே மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

No comments: