News Just In

6/12/2022 10:13:00 AM

பெண் ஒருவர் அடித்துப் படுகொலை - வெளியான பின்னணி!

இரத்தினபுரியில் நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனது மகளையும் கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொன்றதுடன், 11 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்ய முயற்சித்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை சந்தேக நபர் தனது 11 வயது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் தெரிவித்தனர். அதன் போது சிறுமி கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து சந்தேக நபரான தந்தை கொலை முயற்சியை கைவிட்டுள்ளார்.

அதனையடுத்து சந்தேக நபர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த தந்தையும் மகளும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: