News Just In

6/15/2022 06:18:00 AM

எரிவாயு விநியோகம் குறித்து பிரதமர் ரணில் முக்கிய அறிவிப்பு!


எரிவாயு விநியோகம் குறித்து பிரதமர் ரணில் முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு வந்துள்ள கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை வைத்தியசாலைகள், உணவகங்கள், தகன சாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

மேலும், கப்பலில் இருந்து எரிவாயு தரையிறங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தான் பதவியேற்றதன் பின்னர் விநியோகம் ஆரம்பமாகும் திகதி தீர்மானிக்கப்படும் லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் சுமார் 7 நாட்களாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணி, நேற்று இரவு அதற்குரிய கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் இன்று ஆரம்பமானது.

No comments: