அமெரிக்காவில், பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு உயிரிழந்த நபருக்கு புதிய வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேரிலாந்தைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57) சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் மேரிலாந்து மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை முயற்சியில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது.
உலகெங்கிலும் மருத்துவ துறையில் இது ஒரு பெரிய வெற்றியாக கருதப்பட்டது. பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு 2 மாதங்கள் வாழ்ந்த பென்னட் திடீரென இறந்தார். டேவிட்டின் இதயப் பரிசோதனையில் அவருக்கு போர்சின் சைட்டோமெகலோவைரஸ் என்ற வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
No comments: