News Just In

5/30/2022 05:56:00 AM

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸார்!

இலங்கையின் பல பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் இதன் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் இனந்தெரியாதவர்களினால் திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பாடசாலையில் மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகள் காணாமல் போயுள்ளதுடன் மேலும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், இருசக்கர வாகனங்களை உரிய முறையில் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், வெளியூர்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக வந்து இங்கு தங்கியிருப்பவர்களின் விபரங்களை தெரிவிக்குமாறும், அது குறித்த திருட்டுக்களை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் சாய்ந்தமருது பொலிஸார் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

No comments: