ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் போராட்ட களத்தில்...
மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாளையதினம்(2022/04/05) போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கம் அறிவிப்பு
1. மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்கு!
2. அடக்குமுறையை நிறுத்து!
3. ஜனநாயகத்தை உறுதி செய்!
நாளைய தினம் அனைத்து அதிபர் ஆசிரியர்களையும் கருப்பு ஆடையில் அல்லது கறுப்பு பட்டி அணிந்து பாடசாலைக்கு வருகை தருமாறும் பரீட்சை நிறைவுற்ற பின் பாடசாலைக்கு முன்பதாக ஜனநாயக வழியில் அமைதியான போராட்டத்தை முன்னெடுக்கும் படி தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.
எதிர்வரும் 6ஆம் திகதி( புதன்கிழமை) கல்விக் கோட்டம் அல்லது வலய மட்டத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
S. Pradeep
No comments: