ஆளும் கட்சி நாட்டை நடத்த முடியாமல் இருப்பதுடன், எதிர் கட்சியினாலும் நாட்டை நடத்த முடியாது போல் உள்ளதாக தெரிவித்த கிளிநொச்சி விவசாயி ஒருவர், . இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது என ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
உரப் பிரச்சனையால் காலபோக செய்கையில் பாரிய நட்டம் தமக்கு ஏற்பட்டதாகவும், சிறுபோகத்தில் ஈடு செய்யலாம் என எண்ணிய போது தற்பொழுது எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது இருப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பசளை தட்டுப்பாடும், எரிபொருள் தட்டுப்பாடும் தமக்கு பெரும் சவாலாக காணப்படுவதால், எதிர்காலத்தில் விவசாயத்தை முழுமையாக கைவிடவேண்டி நிலை ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிளிநொச்சியில் கணிசமான விவசாயிகள் வாழும் நிலையில், டீசல் இல்லாததால் தமது விவசாய நடவடிக்கைக்கு உழவு இயந்திரங்களை பயன்படுத்த முடியாமல் உள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
No comments: