News Just In

3/06/2022 11:04:00 AM

இன்று மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி!

இன்று(06) இரண்டரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, A, B மற்றும் C ஆகிய வலயங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரையான காலப்பகுதியில் மாத்திரம் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அரசாங்கம் உறுதியளித்தபடி, எரிபொருள் இருப்புக்களின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு இடைநிறுத்தப்படலாம் அல்லது அதன் கால அளவைக் குறைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: