News Just In

3/06/2022 11:19:00 AM

அரசாங்கத்திற்கு எதிராக நள்ளிரவில் தீப்பந்தப் போராட்டம் : தலவாக்கலையில் சம்பவம்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும், நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதைச் சுட்டிக்காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் தலவாக்கலையில் தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் நேற்று(5) இரவு ஏழு மணிக்கு இடம்பெற்றுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், மக்களின் வாழ்வாதாரம் படுமோசம், உரம் இல்லாததால் தேயிலைப் பயிர்ச்செய்கை பாதிப்பு, 24 மணி நேரம் மின்சாரம் கொடுக்க முடியாத அரசாங்கம் வீட்டுக்குப் போ, எரிபொருள் தட்டுப்பாடு, மக்கள் நீண்ட வரிசையில் என அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பி, பதாதைகளை ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபால உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.









No comments: