News Just In

3/03/2022 06:01:00 PM

புடினின் மெழுகு சிலையை தூக்கி குழியில் போட்ட பிரான்ஸ்!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் உலகிலுள்ள முக்கியத் தலைவர்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கடந்த 2000 ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் புடினின் மெழுகு சிலை உருவாக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்து.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.

ஆகவே மறு அறிவிப்பு வரும் வரை புடினின் மெழுகு சிலை குழி ஒன்றில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சிலைகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த புடினின் சிலைக்கு பதிலாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மெழுகு சிலையை வைக்க அருங்காட்சியகம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புடினின் மெழுகுச்சிலை இதுகுறித்து அருங்காட்சியக இயக்குனர் யெவெஸ் டெல்ஹோமியோவ் கருத்துத் தெரிவிக்கையில், அருங்காட்சியகத்தின் வரலாற்றில் முதல்முறையாக, தற்போது நடந்து கொண்டிருக்கும் வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக ஒரு சிலையை திரும்பப் பெறுகிறோம்.

புடினின் சிலை கடந்த வாரத்தில் பார்வையாளர்களின் தாக்குதலுக்கும் உள்ளானது. புடின் சிலை இருந்த இடத்தை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பிடிப்பார் என்றும் தெரவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவை எதிர்த்ததற்காகவும், தனது நாட்டை விட்டு வெளியேற மறுத்து மக்களுடன் ஆதரவாக நின்றதால் அவர் மக்கள் மத்தியில் ஹீரோவாகிவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: