News Just In

1/19/2022 06:33:00 PM

கொவிட் தடுப்பூசி செலுத்த தவறிய மாணவர்களுக்கு பைசர் செலுத்தப்பட்டது!

கொரோனா தொற்றிலிருந்து மாணவ சமூகத்தை பாதுகாக்க நாடு பூராகவும் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட தரம் 7- 13 வரையான பாடசாலை மாணவர்களுக்கும் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசியை செலுத்தத் தவறிய மாணவர்களுக்கு புதன்கிழமை (19) வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம்.பர்ஸான்)




No comments: