News Just In

1/08/2022 11:53:00 AM

மாலை ஆறு மணிக்கு முன்னதாக சமைத்து விடுங்கள்! - நாட்டு மக்களிடம் விசேட கோரிக்கை

மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தி சமைக்கும் நுகர்வோர் மாலை 6 மணிக்கு முன்னதாக உணவைத் தயாரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுக்கை விடுத்துள்ளது.

இதன் மூலம் மின்வெட்டை குறைக்க முடியும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்தார். இந்நிலையில், அடுத்த சில நாட்களிலும் அவ்வப்போது மின்சாரம் தடைப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 15ம் திகதிக்கு பின்னர் பல மணி நேரம் மிக் விநியோகம் தடைப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: