News Just In

1/22/2022 12:08:00 PM

யாழ்ப்பாணம் - சுழிபுரத்தில் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - சுழிபுரத்தில் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைiயிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவும், கடற்படையும் இணைந்து நேற்று(21) நடத்திய தேடுதலில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மூன்று உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில், சுமார் 80 கிலோகிராம் கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

No comments: