News Just In

12/10/2021 06:13:00 PM

சிவானந்தா தேசிய பாடசாலை முன்றலில் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்ட பேரணி! (Video)

சிவானந்தா தேசிய பாடசாலையில் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக பெற்றோர்கள் மற்றும் \பழைய மாணவர்கள் சிலரால் கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று பாடசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேற்படி ஆர்பாட்டத்தின்போது பாடசாலை நுழைவாயிலானது சங்கிலி போட்டு பூட்டப்பட்டிருந்தது. இதனை மற்றைய ஆசிரியர்கள் ஆட்சேபித்த நிலையில் ஆர்ப்பாட்டகாரர் சிலருக்கும் ஆசிரியர் சிலருக்கும் இடையே கருத்துமோதல்களும் இழுபறியும் இடம்பெற்றது.

இதை கண்டிக்கும் முகமாக பாடசாலை ஆசிரியர்களால் குறித்த தினத்திலே அடையாள ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றபோதிலும் இச்சம்பவத்தை மேலும் கண்டிக்கும் வகையில் இன்று ஆசிரியர் சங்கத்தால் சுகவீன விடுமுறை போராட்டமும் பிற்பகல் 2.00 மணியளவில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் சிவானந்த பாடசாலைமுன் நடைபெற்றது. 

ஆசிரியர்களுடன் ஆசிரிய தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர். இவர்களின் கோரிக்கைகளாக பின்வரும் விடயங்கள் காணப்பட்டது.

1. ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் காடையர்களை சடத்தின்முன் நிறுத்து.

2. ஆசிரியர்களை அரசியல் அதிகாரத்தை கொண்டு அடக்க முனையாதே.

3. மாணவர்களின் கல்வியை குண்டர்களால் சீரழிக்காதே.











No comments: