கிராம உத்தியோகத்தராக கடமையாற்றி தற்சமயம் நிருவாகத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தராகப் பதவி உயர்வு பெற்றிருக்கும் எம்.ஐ.ஏ. சுபைர் அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு திங்கள்கிழமை 06.12.2021 இடம்பெற்றது.
ஏறாவூர் மஸ்ஜிதுர் றிபாய் பள்ளிவாயல் நிருவாகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு மேற்படி பள்ளிவாயலின் பேஷ் இமாம் ஐ.எம். றியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிருவாகத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தராகப் பதவி உயர்வு பெற்றிருக்கும் சுபைர் அவர்களது கடந்த கால சேவைகளைப் பாராட்டி உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் வாழ்த்துமடல்கள் கையளிக்கப்பட்டு பொன்னாடைகளும் போர்த்தப்பட்டதாக பள்ளிவாசல் நிருவாக உறுப்பினரும் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தருமான சி. பிறேம் நஸீர் தெரிவித்தார்.
ஏறாவூர் 2சி மற்றும் ஏறாவூர் 2பி ஆகிய இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றிய எம்.ஐ.ஏ. சுபைர் தற்சமயம் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் நிருவாகத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இப்பிரதேச செயலகத்தில் நிருவாகத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தராகப் பதவி வகித்த கபீர் ஓய்வு பெற்றதையடுத்து சுபைர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: