அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் நாட்டுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர்.
அதற்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தடுத்துநிறுத்துவதற்காகவே சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் புதிய வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை அரசாங்கம் எத்தகைய சட்டதிட்டங்களைப் பிரயோகித்து எம்மை அடக்குவதற்கு முயற்சித்தாலும், அவற்றைக்கடந்து எதிர்வரும் 16 ஆம் திகதி கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் மாபெரும் மக்கள் போராட்டம் நிச்சியமாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments: