News Just In

10/27/2021 07:20:00 PM

க.பொ.த (உ /த ) பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கு பைசர் தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பம்!

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதாரசேவைகள் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் 13 தரம் 14 வகுப்பு மாணவர்களுக்கு பைசர் கொரோனா தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கமைய இம்மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இந்த பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி, கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயம் என்பவற்றில் விசேட தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு பைசர்  தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையானது  இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில் பாடசாலை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது. மட்டக்களப்பு நகர சுகாதார வைத்திய அதிகாரி டி.கிரிசுதனின் கண்காணிப்பில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றி கரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

 (மட்டக்களப்பு லத்தீப் ) 

No comments: