News Just In

8/28/2021 09:12:00 AM

மட்டக்களப்பில் முதல் முறையாக டெல்டா வைரஸ் கண்டுபிடிப்பு...!!


மட்டக்களப்பில் டெல்டா வீரியன் மற்றும் அல்பா வீரியன் வைரஸ் தொற்றுள்ளவர்கள் அடையாம் காணப்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட 3 மாதிரிகளில் இருவருக்கு டெல்டா தொற்றும் 1 வருக்கு அல்பா தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார் .

கடந்த 24 மணித்தியாலத்தில் 274 தொற்றாளர்களும் 10 மரணமும் சம்பவித்துள்ளதுடன் மட்டக்களப்பில் சராசரியாக 300 மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதுடன் மொத்தமாக 211பேர் மரணமடைந்துள்ளார்

மட்டக்களப்பு மக்கள் பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளை பேணி செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: