2000ம் ஆண்டு யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரியில் இணைந்து மகத்தான சேவையினை எங்களிற்கு வழங்கிய அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய உபபீடாதிபதியான திருமதி.சிவபாதம் செல்வமலர் அவர்கள் இன்று தனது சேவையினை நிறைவு செய்கின்றார்.
இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் Dip (ELT), B.A(English), PGDE(merit)(NIE), M.A in Education, English Language Teaching and international development(London) போன்ற பல பட்டங்களினை பெற்றதுடன், அரச பாடசாலைகளில் சிறந்த ஆசிரியராகவும் கடமையாற்றினார்.
01.05.2000 யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகவும் 01.01.2009_12.08.2021 வரை உப பீடாதிபதியாகவும் கடமையாற்றினார். இக் காலப் பகுதியில் கற்பிப்பதிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒழுக்கத்திலும் மிகவும் கட்டுப்பாடான கொள்கையைக் கையாண்டார்.
இவர் பல்லாயிரம் ஆசிரியர்களின் மனதினிலே நிலைத்திருக்கும் ஆசான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இன்று போல் என்றும் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ உங்களிற்கும் உங்கள் குடும்பத்திற்கும் எங்களுடைய அக மகிழ்ந்த வாழ்த்துக்கள்.
(யாழ் கல்வியியற் கல்லூரி- 18ஆம் அணி மாணவர்கள்)
No comments: