மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முந்தன்குமாரவெளி பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிந்தவர்களை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் 26 வயதுடைய ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments: