News Just In

7/10/2021 07:00:00 AM

மட்டக்களப்பு- காத்தான்குடியில் கைக்குண்டு மீட்பு...!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று மாலை கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி ஆறாம் வட்டாரத்திலுள்ள கைவிடப்பட்ட காணியில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்க்கப்பட்டுள்ளது.

நேற்று(9) மாலை விறகு எடுக்கச் சென்ற பெண் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் முன்னெடுக்கப்படுவதுடன் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: