News Just In

7/10/2021 06:34:00 AM

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒரு மாவட்டத்தின் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில்...!!


நாட்டில் உடன் அமுலுக்கு வரும் வகையில் கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 03 பகுதி இன்று(11) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


No comments: