சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சமூர்த்தி சீட்டிழுப்பு நிதியத்தின் மூலம் பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் சமுர்த்தி வீடமைப்பு சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஆ.பா.றகுமத்தும்மா என்பவருக்கு வாழ்வாதார திட்டத்திற்காக அவருடைய மகனுக்கு வியாபாரம் செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்து வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments: