News Just In

7/12/2021 09:03:00 PM

மட்டக்களப்பில் இன்று மாத்திரம் 79பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 9017 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(12) 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் முதல் தடவை மாத்திரம் 5004பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது தடவையாக செலுத்தப்பட்டவர்கள் 4013 பேருமாக மொத்தம் 9017பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும்
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேருக்கும்
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேருக்கும்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேருக்கும்
செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேருக்கும்
ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேருக்கும்
பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும்
ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும்
வெல்லாவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்குமாக இன்று மாத்திரம் 79 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்துடன் மட்டக்களப்பு உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் முதல் தடவை மாத்திரம் 5004 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டாவது தடவை 4013 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இன்று மாத்திரம் மொத்தமாக 9017 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: