இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலர் விளக்கமறியலில் இருந்து வரும் நிலையில் குறித்த மெய்பாதுகாவலருக்கு கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வர முடியாத நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
குறித்த வழக்கில் இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்படவேண்டிய ஆவணங்களில் குறைபாடுகள் உள்ளமையால் அனைத்து ஆவணங்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்க வேண்டும் என குறித்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த சந்தேக நபரான மெய்பாதுகாவலரை எதிர்வரும் 12 ம் திகதி திங்கட்கிழமை வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் தாய் மற்றும் தந்தை ஆகியோரிடம் குறித்த வழக்கு தொடர்பாக வினவியபோது எதுவித கருத்துக்களும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: