மஸ்கெலியா - ப்ரவுன்ஸ்வீக் தோட்டத்தின் டனட்டா பிரிவில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை 5 மணியளவில் குறித்த குழந்தை காணாமல் போயிருந்த நிலையில், குழந்தையை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்தின் சாணக்குழியில் விழுந்திருந்த நிலையில் குழந்தையை மீட்டெடுத்து, வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: