News Just In

6/23/2021 01:37:00 PM

இனங் காணப்படாத டொல்பினின் உடலை ஒத்த உயிரினத்தின் உடல் பாகம் கரையொதுங்கியது...!!


இலங்கையில் மொரட்டுவ, அங்குலான கடற்கரையில் நேற்று டொல்பினின் உடலை ஒத்த உயிரினம் ஒன்றின் உடற்பாகங்கள் கரையொதுங்கியிருந்தன.

இந்த உயிரினம் ஒரு பாலூட்டியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அத்திடிய வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடலமைப்பில் டொல்பினைப் போன்று தோற்றமளிக்கும் குறித்த உயிரினத்தில் உடல், இரண்டு துண்டங்களாக கரையொதுங்கியிருந்தன.

அத்துடன் குறித்த உயிரினத்தின் உடல் பாகங்கனை மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர், மேலதிக பரிசோதனைகளுக்காக வனஜீவராசிகள் மருத்துவ பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments: