News Just In

6/23/2021 01:30:00 PM

மட்டக்களப்பு தாழங்குடா குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் மடக்கிப் பிடிப்பு...!!


மட்டக்களப்பு- மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா - 03 சவேரியார்புரம் பகுதியில், இன்று (23) காலை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையானது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது.

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலையினால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, பிரதேச மக்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்ததனைத் தொடர்ந்து அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று முதலையினை மீட்டுள்ளதுடன், உன்னிச்சை காட்டுப்பகுதியில் உள்ள குளத்தில் விடுவித்துள்ளனர்.

குறித்த முதலை சுமார் 6 அடி நீளமானது என குறித்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.




No comments: