கண்டி - கட்டுகஸ்தோட்டை- ரணவன வீதிப் பகுதியில், குறித்த மாணவர் தங்குமிட விடுதி இயங்கியுள்ளது.
அந்த விடுதியில் இருந்த மாணவர் ஒருவர், கொவிட்-19 தொற்றுறுதியாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த தங்குமிட விடுதியில் இருந்த 50 மாணவர்களும், எட்டு நிர்வாக அதிகாரிகளும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments: