News Just In

6/27/2021 02:21:00 PM

மட்டக்களப்பு– திருகோணமலை அரச உத்தியோகத்தர்களுக்கான பஸ் சேவை திங்கள் முதல் ஆரம்பம்...!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு – திருகோணமலை மாவட்டங்களிலுள்ள அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான இலங்கைப் போக்கு வரத்துச் சபை (CTB) பஸ் சேவைகள் திங்கள் தொடக்கம் (28.06.2021) இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு சாலை நிருவாகம் அறிவித்துள்ளது.

இச்சேவை மட்டக்களப்பு பஸ் நிலையத்திலிருந்து காலை 05.40 இற்கு புறப்பட்டு திருகோணமலையை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி சாலையிலிருந்தும் திங்கள் 28.06.2021 காலை ஆறு மணிக்கு திருகோணமலைக்கான பஸ் சேவை ஆரம்பமாகிறது என சாலை முகாமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் எதிர்வரும் வாரத்தில்கூட மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க COVID - -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO ) பரிந்துரைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: