News Just In

12/17/2025 08:15:00 PM

மட்டக்களப்பு கல்லடி புதிய, பழைய பாலங்கள் ஐரோப்பிய தொழில்நுட்ப குழுவினரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது

மட்டக்களப்பு கல்லடி புதிய, பழைய பாலங்கள் ஐரோப்பிய தொழில்நுட்ப குழுவினரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு கல்லடி புதிய, பழைய பாலங்களுக்கு புதன்கிழமை 17.12.2025 வருகை தந்த ஐரோப்பிய தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதான பாலங்களை ஆய்வு செய்வதற்கு நப்லஸ் பல்கலைக்கழக பேராசிரியர் லூயி டி சார்நோ அடங்கலான ஐரோப்பிய ஒன்றிய தொழில் நுட்ப நிபுணர் குழுவினர் ஆய்வுகளை நடத்தினர்.

மேலும் இந்தப் பாலம் தொடர்பாக நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய உபகரணங்கள் மூலம் பகுப்பாய்வுகளை மேற்கொண்டு தொழில் நுட்ப ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கவுள்ளனர்.

ஆய்வு நடவடிக்கையின்போது இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ ஜீஒரீஅநோ, பௌலோபுற்றிநோ, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் ஏ.எம். சி.ரி அத்தநாயக்க, பிரதம பொறியியலாளர் எஸ். கலாதரன், கிழக்கு மாகாண பாலங்கள் பராமரிப்பு நிர்வாகப் பொறியியலாளர் எம்.ஏ. வாதுலன், மாகாண பாலங்கள் வடிவமைப்பு பொறியியலாளர் கே. வில்வராசன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பாலங்கள் பராமரிப்பு நிர்வாக பொறியாளர் ரீ. ராமச்சந்திரன், மாவட்ட இடர் நிவாரண சேவை உத்தியோகத்தர் எம். சுரேஸ்குமார் உட்பட இன்னும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments: