News Just In

6/10/2021 10:45:00 AM

பொத்துவில் புத்தொளி மன்றத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி மக்களின் இடர் போக்கும் செயற்திட்டம்...!!


நாட்டில் ஏற்பட்டுள்ளது கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக அதனைக்கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசாங்கம் விதித்துள்ள பயணத்தடை மற்றும் வீட்டிலிருந்து வெளியேறத்தடை போன்ற காரணங்களால் மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கபபட்டுள்ள சூழலில் தினக்கூலி வேலை செய்பவர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் விவசாயம் செய்பவர்கள் போன்றவர்கள் வருமானமின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வேளை உணவுக்கு அல்லலுரும் பல குடும்பங்களை அவதானிக்க முடிகின்றது.

அந்தவகையில் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு உணவு பொதிகளை வழங்கி ஆற்றுப்படுத்தும் செயற்பாட்டில் பொத்துவில் புத்தொளி மன்ற இளைஞர்கள் இறங்கி செயற்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மிகவும் மோசமாக இடர்படும் ஒரு தொகுதி குடும்பங்களுக்கு அண்மையில் வெளிநாடுகளில் தொழில்புரியும் எம்மவர்களின் உதவியைப் பெற்று உலருணவு வழங்கி அம்மக்களை ஆற்றுப்படுத்தியுள்ளனர். மேலும் அல்லரும் பல குடும்பங்கள் காணப்படுவதால் புலம் பெயர் தமிழ் மக்கள் பெருமனதுடன் அம்மக்களுக்கு உதவிபுரிய முன்வர வேண்டும் என்கின்ற கோரிக்கையையும் விடுத்துள்ளனர்.
 
இவ்வாறான கைங்கரியத்தை கொரனா இடர் காலத்தில் தமது துன்பத்தையும் பொருட்படுத்தாது புத்தொளி மன்றத்தின் தலைவர் திரு.த.வசந்தன், செயலாளர் திரு. கோ.சிறிதரன், திரு. அ.ஜெயசங்கர் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.








No comments: