News Just In

6/05/2021 03:55:00 PM

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் 81பேருக்கு PCR பரிசோதனை முன்னெடுப்பு...!!


எஸ்.எம்.எம்.முர்ஷித் 
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று சனிக்;கிழமை எண்பத்தியொரு (81) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் மூலம் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மற்றும் இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்றுக்குள்ளான நிலையில் இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள் என எண்பத்தியொரு (81) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றது.

குறித்த பீ.சி.ஆர் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்; ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையிலும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலும் அதிகரித்து காணப்படும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேசத்தினை பாதுகாத்துக் கொள்ளுமாறு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.





No comments: