News Just In

6/05/2021 04:35:00 PM

திருகோணமலை- கந்தளாய் பகுதியில் பயணத்தடையை மீறிய 11 பேர் கைது...!!


எப்.முபாரக் 
திருகோணமலை மாவட்டத்தில் பயணத்தடைகளை மீறி செயற்படுவோரை பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணத்தடைகளை மீறிய 11 பேரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று(5) மேற்கொண்ட இச் சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் அநாவசியமான முறையில் வாகனங்களில் சென்ற 11 பேரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

ஐம்பதிற்கும் மேற்பட்டோரை பொலிஸார் பிடித்து எச்சரிக்கை செய்தும் விடுவித்துள்ளனர்.

இச்செயற்பாடு திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய், திருகோணமலை, மூதூர் கிண்ணியா மற்றும், உப்புவெளி,போன்ற பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்ககக்கப்பட்டு வருகின்றது.

அனுமதியின்றி பயணத்தடையை காலத்தில் செயற்பட்ட 11 பேருக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.







No comments: