News Just In

6/24/2021 07:43:00 AM

மட்டக்களப்பு உட்பட மூன்று மாவட்டங்களின் 06 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்...!!


மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் குருணாகல் மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தின், யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவின் குருநகர் மேற்கு மற்றும் ரெக்லமேசன் மேற்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி காவல்துறை பிரிவின் மஞ்சதொடுவாய் வடக்கு மற்றும் மஞ்சதொடுவாய் தெற்கு ஜின்னா வீதி கிராம சேவகர் பிரிவும், மண்முனை காவல்துறை பிரிவின் மாமாங்கம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குருணாகல் மாவட்டத்தில், இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராமும், கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் கனுக்கெட்டிய கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments: