பயணக் கட்டுப்பாடு இன்று (25) தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் ஒன்றுகூடுவதையும், தேவையின்றி வெளிச் செல்வதையும் தடுக்கும் வகையில் வாழைச்சேனை பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ச பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுவினர் களத்தில் நின்று வீதிக்கு வரும் மக்களை கட்டுப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
வரத்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செவதாக இருந்தால் தூர இடங்களுக்குச் செல்லாமல் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்யுமாறு பொலிஸாரினால் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
No comments: